» Publishers, Monetize your RSS feeds with FeedShow: More infos (Show/Hide Ads)
Date: Thursday, 12 Jul 2012 08:37
எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடைய வாசகர்களை நியு இங்கிலாந்து பகுதியில் சந்திக்கிறார்.
அவரைக் குறித்த பின்புலம் + அறிமுகம்: http://www.sramakrishnan.com/?page_id=63
நாள்: வியாழன், ஜூலை 12, 2012
நேரம்: ஆறு மணி மாலை
முகவரி: 7 Summer Street Chelmsford, MA 01824
தொடர்புக்கு: bsubra at gmail dot com
பாஸ்டன் பக்கம் இருக்கும் நண்பர்களுக்கும் தமிழ் நூல்வாசிகளுக்கும் தெரியப்படுத்தவும்.
Date: Wednesday, 20 Jun 2012 22:09
தொடர்புள்ள பதிவு: அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டும் பெட்னா?
முதலில் இந்தக் குறும்படத்தை பார்க்கலாம்:
அடுத்ததாக ஃபெட்னா வலையகத்திற்கு செல்லலாம் http://www.fetna.org/index.php/2011-12-22-16-59-30/2011-12-22-16-59-32/item/145-tamilmatrimony
சாதிக்குள்ளேயே மணம் முடிப்பது, குலம் பார்த்து மருமகன் பிடிப்பது போன்ற வழக்கங்களை அமெரிக்கா வந்தும் விட்டுத் தொலைக்க முடியாத சூழலுக்கு பெட்னா இட்டுச் செல்கிறது.
அமெரிக்காவின் ஒவ்வொரு வீடாக சென்று, “நீங்கள் கோத்திரம் பார்க்கக் கூடாது; மதம் பார்த்து கல்யாணம் கட்டக் கூடாது!” என்று பிரச்சாரம் செய்வது கஷ்டம்.
ஆனால், தன் வீட்டில், தன்னுடைய சங்கமத்தை ஒழுங்காக செய்யலாம்! அனைத்து தமிழர்களும் ஒன்று கூடும் இடத்தில் ‘உங்கள் ஜாதி என்ன? தங்களின் மதம் எது? என்ன பிறப்பு? அந்த குறுகலுக்குள்தான் பொண்ணும் மாப்பிள்ளையும் கிடைக்கும்!” என்று நெறிக்க வேண்டாம்.
மிக மிக எளிமையாக, சாதி, இனம் போன்ற வளையங்கள் கேட்காமல்தான் பதிவுகள் நடக்க வேண்டும் என்று தமிழ் மேட்ரிமொனி.com தளத்தை கேட்க வேண்டும்.
தன்னுடைய இடத்தில் சாதி கேட்டு, இனம் வினவி அந்தந்த குழுக்களுக்குள் மணம் புரிந்து வைக்கும் அமைப்புகளுக்கு பெட்னா இடம் தரக் கூடாது. நல்லகண்ணுவை முகப்பில் நிறுத்திவிட்டு, பின்னணியில், உங்கள் ஜாதி என்ன, குலம் சொல்லுங்க என்று கேட்க கூடாது. அவ்வாறு கூட வலியுறுத்தாமல், தன்னுடைய மாநாட்டில், தமிழ் மேட்ரிமொனி என்ன அசிங்கம் வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடாமல், தைரியமாக தடுக்க வேண்டும். இல்லை என்றால், காந்தி குல்லா போட்டு வாக்கு வாங்கும் ஊழல்வாதிகளே மேல்.
மிக எளிமையான வேண்டுகோளை அமெரிக்க தமிழ் சங்கங்கள் முன்வைக்கலாம்:
1. FETNA மூலமாக ரெஜிஸ்தர் செய்பவர்களுக்கு ஜாதியையும் மதத்தையும் கேட்க கூடாது.
2. FeTNA சாதி சார்ந்த திருமணங்களை ஊக்குவிக்கவில்லை என்றால், அவ்விதமான நிலைக்கு சாதகமான இடத்தை ஏற்பாடு செய்யாமை.
இந்த மாதிரி கூட ஃபெட்னா வற்புறுத்தாமல், அமெரிக்காவிலும் தமிழர்களின் சாதியையும் இனத்தையும் கேட்டு அடையாளம் கண்டுதான் திருமண பந்தங்களை ஏற்படுத்த உதவுமா?
முதலில் இந்தக் குறும்படத்தை பார்க்கலாம்:
அடுத்ததாக ஃபெட்னா வலையகத்திற்கு செல்லலாம் http://www.fetna.org/index.php/2011-12-22-16-59-30/2011-12-22-16-59-32/item/145-tamilmatrimony
சாதிக்குள்ளேயே மணம் முடிப்பது, குலம் பார்த்து மருமகன் பிடிப்பது போன்ற வழக்கங்களை அமெரிக்கா வந்தும் விட்டுத் தொலைக்க முடியாத சூழலுக்கு பெட்னா இட்டுச் செல்கிறது.
அமெரிக்காவின் ஒவ்வொரு வீடாக சென்று, “நீங்கள் கோத்திரம் பார்க்கக் கூடாது; மதம் பார்த்து கல்யாணம் கட்டக் கூடாது!” என்று பிரச்சாரம் செய்வது கஷ்டம்.
ஆனால், தன் வீட்டில், தன்னுடைய சங்கமத்தை ஒழுங்காக செய்யலாம்! அனைத்து தமிழர்களும் ஒன்று கூடும் இடத்தில் ‘உங்கள் ஜாதி என்ன? தங்களின் மதம் எது? என்ன பிறப்பு? அந்த குறுகலுக்குள்தான் பொண்ணும் மாப்பிள்ளையும் கிடைக்கும்!” என்று நெறிக்க வேண்டாம்.
மிக மிக எளிமையாக, சாதி, இனம் போன்ற வளையங்கள் கேட்காமல்தான் பதிவுகள் நடக்க வேண்டும் என்று தமிழ் மேட்ரிமொனி.com தளத்தை கேட்க வேண்டும்.
தன்னுடைய இடத்தில் சாதி கேட்டு, இனம் வினவி அந்தந்த குழுக்களுக்குள் மணம் புரிந்து வைக்கும் அமைப்புகளுக்கு பெட்னா இடம் தரக் கூடாது. நல்லகண்ணுவை முகப்பில் நிறுத்திவிட்டு, பின்னணியில், உங்கள் ஜாதி என்ன, குலம் சொல்லுங்க என்று கேட்க கூடாது. அவ்வாறு கூட வலியுறுத்தாமல், தன்னுடைய மாநாட்டில், தமிழ் மேட்ரிமொனி என்ன அசிங்கம் வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடாமல், தைரியமாக தடுக்க வேண்டும். இல்லை என்றால், காந்தி குல்லா போட்டு வாக்கு வாங்கும் ஊழல்வாதிகளே மேல்.
மிக எளிமையான வேண்டுகோளை அமெரிக்க தமிழ் சங்கங்கள் முன்வைக்கலாம்:
1. FETNA மூலமாக ரெஜிஸ்தர் செய்பவர்களுக்கு ஜாதியையும் மதத்தையும் கேட்க கூடாது.
2. FeTNA சாதி சார்ந்த திருமணங்களை ஊக்குவிக்கவில்லை என்றால், அவ்விதமான நிலைக்கு சாதகமான இடத்தை ஏற்பாடு செய்யாமை.
இந்த மாதிரி கூட ஃபெட்னா வற்புறுத்தாமல், அமெரிக்காவிலும் தமிழர்களின் சாதியையும் இனத்தையும் கேட்டு அடையாளம் கண்டுதான் திருமண பந்தங்களை ஏற்படுத்த உதவுமா?
Date: Wednesday, 20 Jun 2012 15:16
கனடாவில் 10வது சர்வதேச தமிழ் திரைப்படவிழா. எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
பத்தாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா ஸ்கார்பாரோ சிவிக் செண்டர் (scarborough civic Centre) என்ற இடத்தில் வரும் ஜூன் 23ஆம் தேதி, சனிக்கிழமை நண்பகல் 12 நடைபெறும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Date: Saturday, 16 Jun 2012 13:59
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலிஃபோர்னியா பகுதிகளில் ஜூன் 19 முதல் ஜூலை 6 பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார் .
இப்பகுதிகளில் அவரது நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்:
நாஞ்சில் நாடன் வழங்கும் கம்ப ராமாயணம் சொற்பொழிவு:
ஜூன் - 20 - மாலை 7 மணி முதல் 10 மணி வரை - இடம்: 38884 Stillwater Cmn, Fremont, CA
ஜூன் - 21 - மாலை 7 மணி முதல் 10 மணி வரை - இடம்: 4743 Mendocino Ter, Fremont, CA 94555
கம்ப ராமாயண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் strajan123@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
ஜூன் 30 - பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி - எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் பி.ஏ.கிருஷ்ணன் படைப்புகள் குறித்த உரை, எழுத்தாளர்களின் ஏற்புரைகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இடம் பெறும்
இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலக அரங்கம், ஸ்டீவன்ஸன் ப்ளவட் , பசியோ பாத்ரே சந்திப்பு, ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
நேரம்: 2 மணி முதல் 5 மணி வரை
ஜூலை 1 ஞாயிறு காலை - எழுத்தாளர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி - சாக்ரமெண்டோ நகரம் - சரியான நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப் படும்
ஜூலை 5 - நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் - இடம்: லாஸ் ஏஞ்சலஸ் நகரம் - வியாழன் மாலை 7 மணி முதல் - 10 மணி வரை
நேரம் மற்றும் இடம் பற்றிய விபரங்களுக்கு
ராம்: 310-420-5465 -- losangelesram@gmail.com
மற்றும்
ராஜேஷ் 626-848-2102 --- rajeshmadras@gmail.com ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம். இப்பகுதி வாழ் தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்ச்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்: ராஜன், 510-825-2971 ,strajan123@gmail.com
Date: Monday, 04 Jun 2012 14:21
எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பும் அவரது கலங்கிய நதி நாவல் குறித்த உரையாடல்களும் வரும் சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி ம்தியம் 2 முதல் 6 வரை அன்று கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறவுள்ளது. கலிஃபோர்னியா, சான்ஃபிரான்ஸிஸ்கோ சிலிக்கன் வேலி/வளைகுடாப் பகுதியில் வசிக்கும் வாசக அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.
அன்புடன்
ராஜன்
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
8557 Peachtree Avenue
Newark CA 94560
தேதி/நேரம்: சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி, 2 மணி முதல் 6 மணி வரை
தொடர்பு கொள்ள: ராஜன் 510-825-2971, பகவதி பெருமாள் 510-812-6036
பி ஏ கிருஷ்ணன் பதிவுகள்:
Art Appreciation Series – PA Krishnan : Part IV
Date: Tuesday, 29 May 2012 10:06
எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு.
சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் தலைகீழ்விகிதங்களை இயக்குநர் தங்கர்பச்சான் ’சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது
வட அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் டிசி மாநிலங்களில் சந்திப்பு நடைபெறும்.
i) ஞாயிறு - ஜூன் 3 மாலை 6:30 மணியளவில் - ஓக் ட்ரீ ரோடு, எடிசன் உணவகம்
ii) வியாழன் - ஜூன் 7 மாலை 7 மணியளவில் - பாஸ்டன்
iii) சனி - ஜூன் 9 மாலை - வாஷிங்டன் நகரம்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு முகவரி – bsubra@gmail.com
அனைவரும் வருக.
நாஞ்சில் நாடன் குறித்து மேலும் அறிய:
1. http://nanjilnadan.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/
2. http://solvanam.com/?author=130
3. http://tamilhelp.wordpress.com/2012/04/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/
4. http://www.jeyamohan.in/?tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D
Date: Tuesday, 10 Feb 2009 19:03
இது தேர்தல் காலம்.

தேர்தலை முன்னிட்டு தோன்றி இருக்கும் சிறப்பு வலைப்பதிவு: தேர்தல் - 2009
அது வோர்ட்ப்ரெஸ் கட்சி என்றால், ப்ளாகரிலும் கூட்டுப் பதிவு உதயமாகி உள்ளது: தேர்தலின் திசைகள்
அப்படியே தலை 10, சிறந்த பத்து, டாப் டென் பட்டியலுக்காகவே நான் 10 Hot பதிவைத் தொடங்கி இருக்கிறேன்.
உங்களின் பரிந்துரை, பதிவுகள், லிஸ்ட் எல்லாவற்றையும் தொகுத்து சேமித்து வைக்கும் எண்ணம். சமீபத்திய சூடான இடுகைகள்:
இரண்டு அ-திரட்டி
1. இ வால் போஸ்டர் | eWallPoster
2. தமிழின் முக்கிய பதிவர்களின் இடுகைகளுக்கான குறுஞ்செய்திரட்டி: Twitter / tamils

தேர்தலை முன்னிட்டு தோன்றி இருக்கும் சிறப்பு வலைப்பதிவு: தேர்தல் - 2009
அது வோர்ட்ப்ரெஸ் கட்சி என்றால், ப்ளாகரிலும் கூட்டுப் பதிவு உதயமாகி உள்ளது: தேர்தலின் திசைகள்
அப்படியே தலை 10, சிறந்த பத்து, டாப் டென் பட்டியலுக்காகவே நான் 10 Hot பதிவைத் தொடங்கி இருக்கிறேன்.
உங்களின் பரிந்துரை, பதிவுகள், லிஸ்ட் எல்லாவற்றையும் தொகுத்து சேமித்து வைக்கும் எண்ணம். சமீபத்திய சூடான இடுகைகள்:
- சிறந்த பத்து தமிழ் நாவல்கள்: கந்தர்வன்
- 10 Reasons why you should voice your support for Tamil Eezham: ஏன் ஈழம்?
- Suresh Kannan: Ten Cool Tamil Fiction for Short Films
- 1992: சிறந்த 10 - சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கம்)
- Top 10 Download sites: Torrents
- Science & Technology Advancements: Latest & Greatest from 2008
- 'குத்துங்க எசமான்': Top 10 வேணுங்கட்டிக்கு வேணும்
- அவள் விகடன் :: என்ன படிக்கலாம்? - டாப் 10 படிப்புகள்!
- சுஜாதா: தலை பத்து புத்தகம்
இரண்டு அ-திரட்டி
1. இ வால் போஸ்டர் | eWallPoster
2. தமிழின் முக்கிய பதிவர்களின் இடுகைகளுக்கான குறுஞ்செய்திரட்டி: Twitter / tamils
Date: Friday, 16 Jan 2009 09:41
தொடர்புள்ள பதிவு:
1. All-in-one Hub Awards 2009 Polls
2. What were the notable & forgettable Tamil Movies in 2008: Thamil Cinema
3. Superhit Songs in Tamil Cinema - 2008 Year in Review
Date: Thursday, 08 Jan 2009 10:09
இந்த மாதிரி நூல் நிறைய எழுதிய நுட்பர், மறுமொழியை நிராகரித்து விடுவார் என்பது முதல் அதிர்ச்சி. அப்படி என்ன அபாண்டமாக அரற்றி இருக்கிறோம் என்பது இன்னொரு மருட்சி.
சென்ற முறை 'ஒபாமா, அமெரிக்கா பற்றி ஃபிடல் காஸ்ட்ரோ' சொன்னதற்கு சிம்பிளாக நாலு வார்த்தை சொல்லி இருந்தேன். அது யாதெனப்படில்:
---ஜான் மெக்கெயின் இன்னமும் மோசம். முன்னாள் போர் விமானியான இவர், வியட்நாம் மீது டன் கணக்கில் குண்டுகள் வீசியிருக்கிறார்---
நீங்கள் சார்ந்திருக்கும் நிறுவனம் வெளியிடும் புத்தகம் எல்லாவற்றுக்கும் நீங்கள் பொறுப்பேற்க முடியாது என்பது போல் அமெரிக்க படை சார்பாக அங்கு சென்றவர், இட்ட கட்டளையை நிறைவேற்றினார்.
அவரா போர் தொடுத்தார்?
சென்ற அனுபவம் கொடுத்த படிப்பினையில் இந்த முறை பதிவாக இட்டேன்: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்
இந்த முறையும் சில பல மறுமொழிகளை நிராகரித்து இருக்கிறார்.
நான் குருவி மாதிரி. படிக்க: பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை
இந்த மாதிரி கீச்கீச்களை ஏன் நிறுத்தினார் என்று இப்போது ஆலோசனை நேரம்:
பாதிப் பேர் கூகிள் ரீடரிலும், மீதப் பேர் படிக்காமல் தலைப்பை மட்டும் தமிழ்மணத்தில் கவனிக்கும் இந்தக் காலத்தில், சைலன்ட்டாக காமென்ட்டை போட்டு விடலாம்.
ஆனால், ஞாநியைப் போல், சாரு நிவேதிதாவைப் போல் இணையப் புரட்சியாளராக ஆவது எங்ஙனம்?
இந்த மாதிரி மறுமொழியை மடக்கி அனுப்பினால் நாலு பேர் பேசுவார்களே!
Date: Wednesday, 03 Dec 2008 16:45
விட்டுப்போனவர்களை, சேர்க்க வேண்டியவர்களை பரிந்துரைத்தால், தேர்தலில் நிற்க வைத்து விடலாம்.
- அன்புமணி - புகை பிடிக்காதோருக்கும் புற்றுநோய் தருபவர்களை கட்டுக்குள் கொணர்ந்தவர்.
- அபினவ் பிந்த்ரா - நான்கு வருடத்திற்கொருமுறை ஒலிம்பிக்ஸ் வருகிறதே என்று குதூகலிக்கும் மொக்கைப் பதிவர்களுக்கு நாமம் போட்டவர்.
- விஸ்வநாதன் ஆனந்த் - சதுரங்க ஆட்டம் என்றால் உலகிற்கு முதலில் நினைவுக்கு வருபவர்.
- கே பத்னாபையா - பேச்சுவார்த்தையில் இன்னும் நம்பிக்கை துளிர்க்க வைப்பவர்
- ராஜேந்திர கே பச்சௌரி - ஆல் கோர் ஜனாதிபதிக்கு நின்றார்; இவர் நோபல் பரிசு மட்டும் வாங்கினார்.
- ரேணுகா சௌத்ரி - வடக்கில் பிறந்திருந்தால் பிரதம மந்திரியாகி இருக்க கூடியவர்.
- ப சிதம்பரம் - உள்துறையாயிட்டாரே! பொருளாதாரமும் அமெரிக்கா அளவு சரியாமல் காப்பாற்றியவர்.
- லாலு பிரசாத் யாதவ் - இருவுள் பொக்கீடு வரும்போது வானளாவ புகழ் எய்தியவர்.
- மாயாவதி - நடுவணசை காப்பாற்ற வைத்தவர்.
- சோம்நாத் சாட்டர்ஜி - கட்சியை விட நாடாளுமன்றம் பெரிது என்றவர்.
- அர்விந்த் அடிக - இந்தியாவைத் தூற்றி புத்தகம் எழுதி புகழ்பெறுபவர்களில் புதியவர்.
- கமல்ஹாசன் - எல்லாம் இன்ப மயமாக ரசிகர்களை மயக்குபவர்
- ஓவியர் ஆதிமூலம் - காந்தியும் கோட்டோவியமாக தூரிகையில் நிலைத்திருப்பவர்
- மம்தா பேனர்ஜி - டாடா காட்டியவர்
- என் எஸ் ஜி ஜே பி தத்தா - இன்னும் உயிரோடிருக்கிறார்
- ஜி மாதவன் நாயர் - அடுத்ததாக சந்திரனில் இந்தியரை இறக்கி விடுபவர்.
- கிரண் பேடி - டெல்லி காவல் ஆணையர் ஆக்கப்படாவிட்டாலும் சேவையில் ஈடுபடுபவர்.
- ஹேம்ந்த் கர்கரே - ஹிந்துத் தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை அம்பலமாக்கியதாலோ என்னவோ? சாகடிக்கப்பட்டவர்.
- கிருஷ்ணம்மாள் சங்கரலிங்கம் - இந்தியா இன்னொரு நிலக்கிழாரிய பாகிஸ்தானாக ஆகாமல் இருக்க -- வயதான காலத்தில் அக்கடா என்றில்லாமல்; களப்பணியில் சோர்வுறாமால் தொண்டு செய்பவர்.
Date: Monday, 01 Dec 2008 22:12
Date: Tuesday, 30 Sep 2008 04:14
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் டெய்ட்டன் நகரில் உள்ள மசூதியில் இரம்சானை கொண்டாடும் பொருட்டு முன்னூறு பேர் குழுமியிருந்தனர்.
பெற்றோர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக குழந்தைகளுக்கான காப்பகமும் மசூதிக்குள்ளேயே இருந்தது. அந்தக் காப்பகத்துக்குள் அடையாளம் தெரியாத இருவர் நச்சுப்பொருள் நிறைந்த மருந்தை அடித்தனர்.
தொழுகையில் இருந்த பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த முதியவர்கள் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டனர்.
ஒரு குழந்தை உட்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு அங்கேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
'இது போன்ற ஒன்று இதுவரை நடந்ததேயில்லை. மிகவும் கலக்கமாக இருக்கிறது' என்று டெய்டன் நகர இஸ்லாமியக் குழுவின் உறுப்பினர் தாரிக் (Tarek Sabagh) குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு: Terrorists attack Ohio mosque - City of Brass
பெற்றோர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக குழந்தைகளுக்கான காப்பகமும் மசூதிக்குள்ளேயே இருந்தது. அந்தக் காப்பகத்துக்குள் அடையாளம் தெரியாத இருவர் நச்சுப்பொருள் நிறைந்த மருந்தை அடித்தனர்.
தொழுகையில் இருந்த பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த முதியவர்கள் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டனர்.
ஒரு குழந்தை உட்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு அங்கேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
'இது போன்ற ஒன்று இதுவரை நடந்ததேயில்லை. மிகவும் கலக்கமாக இருக்கிறது' என்று டெய்டன் நகர இஸ்லாமியக் குழுவின் உறுப்பினர் தாரிக் (Tarek Sabagh) குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு: Terrorists attack Ohio mosque - City of Brass
Date: Wednesday, 10 Sep 2008 20:49
Date: Monday, 21 Jul 2008 21:47
ரவி ஸ்ரீனிவாஸ் கேட்கக் கூடாத கேள்விகள் -:) கேட்டிருக்கிறார்.
அரசியல்வாதி போல் இதற்கு பதில் சொல்வது நடைமுறை. சிம்புவின் தொல்லைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நயனின் கலைச்சேவை பாதிக்கப்பட்டது என்றால் அது சினிமா சந்தைமுறை. ரவி போன்றவர்கள் ட்விட்டரில் இருந்துகொண்டே இது போன்ற சதிகளை உருவாக்கினர் என்று கட்டுடைத்தல் இணைய எதிர் மரியாதை முறை. இது போன்ற குட்டிகளாகப் போட்டுத்தாக்கும் டைனோக்களை கண்டுகொள்ளாத ரவிக்கு கண்டனம் முறையாகும்.
முதல்ல அமெரிக்கா திருந்தறதுக்கே இன்னும் நீங்க உங்க பதிவில் வழிசொல்லியபாடில்லை. அப்புறம்தானே என்னோட பித்துக்கு வைத்தியம் சித்திக்கும்.
நானூறு பதிவுகள். பெரும்பாலானவை அச்செடுத்து படிக்க கோரியவை. வாழ்த்துகள்.
எழுத்து: கருத்து சொல்லுமளவு எனக்கு விஷயஞானம் போதாது. தாங்கள் தரும் சுட்டிகளைப் படித்து பயன்பெறுகிறேன்.
வலைப்பதிவின் உள்ளடக்கம்: 'மேய்ச்சலில்' தருவது போல் வெறுமனே உரல்களை மட்டும் இட்டு செல்லவேண்டாம். கென் வில்பர் குறித்த பழைய கட்டுரையிலும் கூட மிரட்டாத அறிமுகம் தருவது போன்ற நடை என்னைக் கவர்கிறது. இலகுவாக வாசிக்க வைக்கிறது.
குறிச்சொற்கள்: தற்போதைக்கு ஓரளவே பயன்படுத்துகிறீர்கள். இன்னும் தாராளமாக உபயோகிக்கவும். ஆங்கில வார்த்தைகளும் இடவும்.
வார்ப்புரு: பயனுள்ள widgetகள் சிலவற்றை சேர்க்கலாம்:
நன்றி.
படம்: My Satirical Self - New York Times
பாஸ்டன் பாலாவிடம் - 1. நீங்கள் இடும் இடுகைகளின் எண்ணிக்கையை தாக்குப்பிடிக்க முடியாமல் டிவிட்டரின் சேவை வழங்கிகள் அடிக்கடி திணறுவது உண்மையா?
அரசியல்வாதி போல் இதற்கு பதில் சொல்வது நடைமுறை. சிம்புவின் தொல்லைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நயனின் கலைச்சேவை பாதிக்கப்பட்டது என்றால் அது சினிமா சந்தைமுறை. ரவி போன்றவர்கள் ட்விட்டரில் இருந்துகொண்டே இது போன்ற சதிகளை உருவாக்கினர் என்று கட்டுடைத்தல் இணைய எதிர் மரியாதை முறை. இது போன்ற குட்டிகளாகப் போட்டுத்தாக்கும் டைனோக்களை கண்டுகொள்ளாத ரவிக்கு கண்டனம் முறையாகும்.2. இணைய மற்றும் கணினி addictionனுக்கு பாஸ்டனில் நல்ல சிகிச்சை கிடைக்கிறதா ?நாங்க எல்லாம் அமெரிக்கா மாதிரி. ஆரம்பத்தில் டாட் காம் பங்குகளாக ராயர்காபி க்ளப்பில் பழியாய்க் கிடப்போம். ஈ-பேயும் அமேசானும் விழ ஆரம்பித்தால் வீடு மார்க்கெட் என்னும் ப்ளாகர், வோர்ட்பிரெஸ், ப்ளாக்ஸ்பாட் பின்னாடி பேயாய் திரிவோம். கொஞ்ச நாள் கழித்து அந்த மோகமும் போய் எண்ணெய் பித்து தலைக்கேறினால், ட்விட்டர் கணக்கை கூட்டுவோம்.
முதல்ல அமெரிக்கா திருந்தறதுக்கே இன்னும் நீங்க உங்க பதிவில் வழிசொல்லியபாடில்லை. அப்புறம்தானே என்னோட பித்துக்கு வைத்தியம் சித்திக்கும்.
நானூறு பதிவுகள். பெரும்பாலானவை அச்செடுத்து படிக்க கோரியவை. வாழ்த்துகள்.
என் எழுத்து, வலைப்பதிவின் உள்ளடக்கம், வடிவம் இன்ன பிற தொடர்புடையவை குறித்த உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள்?
எழுத்து: கருத்து சொல்லுமளவு எனக்கு விஷயஞானம் போதாது. தாங்கள் தரும் சுட்டிகளைப் படித்து பயன்பெறுகிறேன்.வலைப்பதிவின் உள்ளடக்கம்: 'மேய்ச்சலில்' தருவது போல் வெறுமனே உரல்களை மட்டும் இட்டு செல்லவேண்டாம். கென் வில்பர் குறித்த பழைய கட்டுரையிலும் கூட மிரட்டாத அறிமுகம் தருவது போன்ற நடை என்னைக் கவர்கிறது. இலகுவாக வாசிக்க வைக்கிறது.
குறிச்சொற்கள்: தற்போதைக்கு ஓரளவே பயன்படுத்துகிறீர்கள். இன்னும் தாராளமாக உபயோகிக்கவும். ஆங்கில வார்த்தைகளும் இடவும்.
வார்ப்புரு: பயனுள்ள widgetகள் சிலவற்றை சேர்க்கலாம்:
- Google Search (Search Box)
- Labels (Show all the labels of posts in your blog)
- Subscription Links (Let your readers easily subscribe to your blog with popular feed readers)
- உங்களின் ட்விட்டர் குறிப்புகள் (add Twitter to your site)
நன்றி.
படம்: My Satirical Self - New York Times
Date: Tuesday, 08 Jul 2008 21:04
அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா?
இந்தியாவில் சற்றேறக்குறைய பத்து மில்லியன் வலை இணைப்புகள் இருக்கின்றன.
செல்பேசி சந்தாதாரர்கள் எவ்வளவு? நிறைய என்பது உங்களை சுற்றிப் பார்த்தாலே தெரியும். எண்ணிக்கை எம்புட்டு என்று எண்ணிப் பார்த்தால் 250 மில்லியனைத் தாண்டி ஏவுகணைப் பாய்ச்சலில் ஏறுகிறது.
மாதந்தோறும் கிட்டத்தட்ட பத்து மில்லியன் புதிய இணைப்புகளை செல்பேசிகள் சேர்த்துக் கொள்கின்றன.
வலைப்பதிவுகள் என்பது பத்து மில்லியன் வாசகர்களை எதிர்நோக்குகிறது. குறுந்தகவல் என்பது மாசாமாசம் ஆஸ்திரேலியாவை தோற்றுவிக்கும் இந்திய மக்கள்தொகையை ஒத்து செல்பேசிகளை குறிவைக்கிறது.
'மன்னன்' ரஜினி மாதிரி கேள்வி கேட்டால்... 10 மில்லி போதுமா? 250 மில்லியன் வேண்டுமா?!
வலைப்பதிவுகளுக்கு ப்ளாகர்.காம், வோர்ட்பிரெஸ்.காம் இருக்கிறது. குறுஞ்செய்திகளை எப்படி அனுப்புவது?
டிவிட்டர்.காம் உபயோகிக்கலாம்.
முக்காலியாக வலைப்பதிவுகள், அரட்டை, மின்னஞ்சல் கொண்டு பயணித்த இணையம் குறுந்தகவல் மூலம் நான்காவது தூணை துணைக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறது.
செல்பேசி கொன்டு குறுந்தகவல் அனுப்பினால் நிறைய பணம் விரயமாகுமே? அதுதான் இல்லை.
வழக்கமாக இணையத்தில் மேய்வது போன்றே ட்விட்டர்.காம் சென்று பலருக்கும் செய்தி அனுப்பலாம்.
வாசகரின் செல்பேசிக்கே செய்திகள் சென்றடவைதால், தொலைபேசி போன்ற உடனடித்தன்மை இங்கே கிடைக்கிறது. அலுவலில் மும்முரமாக மூழ்கி இருந்தாலும், அரை விநாடியே செலவழித்து குறுஞ்செய்தியைப் படித்துவிட்டு, வேலையைத் தொடரலாம். மீட்டிங்கில் இருந்தால் கூட பதில் அனுப்பலாம்.
இதெல்லாம் நான் இப்பொழுதே நண்பர்களுடன் செய்து கொண்டிருக்கின்றேனே! அப்புறம் எதற்கு தனியாக ட்விட்டர்?
சுருக்கமாக, தெரிந்த நண்பர்களுடன் உரையாடுவதை பொதுவில் தெரிவிக்கவும், தெரியாத உறவுகளுடன் தொடர்புகளை உருவாக்கவும், தொடர்பில்லாத விஷயங்களில் தெளிவான கருத்துக்களைப் பெறவும் பயன்படுகிறது.
ஏன் ட்விட்டர் என்பதை விளங்கிக் கொண்டாடியாச்சு. இதெல்லாம் எப்படி செய்வது: ட்விட்டர் குறித்த எளிய அறிமுகம்.
மேலே உள்ள சுட்டியை க்ளிக்காதவர்களுக்கான அறிமுகம்:
அவ்வளவுதான்.
ட்விட்டரினால் ஆய பயன் பற்பல.
திரட்டி என்றாலே ஏதாவது சட்ட திட்டம் இருக்குமே? இங்கு உள்ள நடைமுறை என்ன? Twitter Etiquette | Global Geek News Blog
இந்த மாதிரி பழக்கவழக்கம் எல்லாம் சுயமாகவே நிர்ப்பந்தித்துக் கொள்வதேயன்றி, இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும் என்று ட்விட்டர் வலியுறுத்துவதில்லை. ட்விட்டரில் இருப்பவர்களும் 'ஃபாலோ' பட்டனை அமுக்கி, தங்கள் கோபத்தை/விருப்பத்தை தெரிவித்து சென்றுவிடுவார்கள்.
இவ்வளவு தூரம் படித்திருந்து, வலையில் எதெது எதற்கு என்று குழம்பிப் போயிருந்தால்...
பதிவு: விவரமானவை; வித்து; கோர்வையான உள்ளடக்கம். (உங்கள் இடுகையை சுட்டிக் காட்ட வைக்க வேண்டும்.)
குரல் பதிவு: தமிழ் படிக்கத் தெரியாதோரையும் சென்றடையும்; வேறு வேலை செய்துகொண்டே கூட கேட்கலாம். (நேர்காணல், எழுதத் தெரியாதவரின் குரல், இசையோடு கூடியது)
கூட்டுப்பதிவு: ஒத்த லட்சியம் கொண்டவர்களின் பதிவுப் பயணம். (விழா, நிறுவனம், கட்சி, நுட்பம்)
வலைத்திரட்டி: புதிய பதிவர்களுக்கு அடையாள அட்டை; தமிழ்மணம் போன்ற இடங்களில் விளம்பரம்.
தெரிவுத்திரட்டி: விடுபட்டதற்கான அறிமுக அட்டை; கில்லி போன்ற வலையகங்களில் வாசிக்க மறந்ததற்கான புத்தகக்குறி.
மனிதத்திரட்டி: நம்பகமான குறிச்சொல் கொண்டது; மாற்று போன்ற சேவைகளினால் வலையில் இருந்து பகிர்பவை.
விக்கி: புத்துருவாக்கம்; சகாக்களின் திருத்தத்துடன் நம்பகத்தன்மை.
மனித விக்கி: தேடல்களுக்கு எளிமையான முன்னுரை விடை; மஹாலோ போன்ற இடங்களில் பெரும்பான்மையினரால் கோரப்படும் தலைப்புகளுக்கு புகழ்பெற்றவர்களால் புகட்டப்படும் முடிவுகள்.
அரட்டை: சோர்வு மறக்கடிக்கும்; விவாத களத்துக்குரிய லட்சணங்களுடன், வெற்றி/தோல்வி சாரமற்ற காரம்.
மின்னஞ்சல்: பத்து வரிக்கு மிகுந்தால் கவனமின்மை தரும்; எரிதமாகிப் போகும் அபாயம் உண்டு; தன்னந்தனியே பேச வேண்டியது.
கோப்பு: அச்சிடுவதற்கு வசதி; ஸ்க்ரிப்ட் போன்ற தளங்களில் ஏற்கனவே உள்ளூர் கணினியில் உறங்குவதை உலகுக்கு வெளிப்படுத்தலாம்.
குறுஞ்செய்தி/குறுந்தகவல்: உரையாடல் துவக்கம்; பதிவில் தனித்துவம் மிளிரும் என்றால், ட்விட்டரில் பொதுக்குணம் தூக்கல்; சுட்டிகள் புழக்கம் குறைச்சல்; முக்கியமாக 'யார் வந்தார்கள்? எத்தனை வருகையாளர்? எப்படி வந்து சேர்ந்தார்கள்?' என்று அலசும் புள்ளிவிவர ஸ்டாடிஸ்டிக்ஸ் லேது.
நினைப்பதை, விரும்புவதை, வெறுப்பதை, நம்புவதை, விழைவதை எண்ணியவாறே பதிந்து வைக்க, பதிந்ததை பலகோடி மக்களுக்கும் பரப்ப ட்விட்டருக்கு வாங்க!
மேலும் ட்விட்டர் குறித்து அறிய: எளிய அறிமுகம்.
கருத்துப்படம்: gapingvoid: "cartoons drawn on the back of business cards": why i deleted my twitter account
இந்தியாவில் சற்றேறக்குறைய பத்து மில்லியன் வலை இணைப்புகள் இருக்கின்றன.
செல்பேசி சந்தாதாரர்கள் எவ்வளவு? நிறைய என்பது உங்களை சுற்றிப் பார்த்தாலே தெரியும். எண்ணிக்கை எம்புட்டு என்று எண்ணிப் பார்த்தால் 250 மில்லியனைத் தாண்டி ஏவுகணைப் பாய்ச்சலில் ஏறுகிறது.
மாதந்தோறும் கிட்டத்தட்ட பத்து மில்லியன் புதிய இணைப்புகளை செல்பேசிகள் சேர்த்துக் கொள்கின்றன.
வலைப்பதிவுகள் என்பது பத்து மில்லியன் வாசகர்களை எதிர்நோக்குகிறது. குறுந்தகவல் என்பது மாசாமாசம் ஆஸ்திரேலியாவை தோற்றுவிக்கும் இந்திய மக்கள்தொகையை ஒத்து செல்பேசிகளை குறிவைக்கிறது.
'மன்னன்' ரஜினி மாதிரி கேள்வி கேட்டால்... 10 மில்லி போதுமா? 250 மில்லியன் வேண்டுமா?!
வலைப்பதிவுகளுக்கு ப்ளாகர்.காம், வோர்ட்பிரெஸ்.காம் இருக்கிறது. குறுஞ்செய்திகளை எப்படி அனுப்புவது?
டிவிட்டர்.காம் உபயோகிக்கலாம்.
(ட்விட்டருக்கு மாற்றாக ஃப்ரெண்ட் ஃபீட் வலையகத்தை சிலர் பரிந்துரைக்கிறார்கள். அது தற்போதைக்கு பயனில்லை என்னும் என் கருத்தை பிரதிபலிக்கும் கட்டுரைகளுள் ஒன்று: FriendFeed explodes onto the scene, but it is still an information fire hose)
முக்காலியாக வலைப்பதிவுகள், அரட்டை, மின்னஞ்சல் கொண்டு பயணித்த இணையம் குறுந்தகவல் மூலம் நான்காவது தூணை துணைக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறது.
செல்பேசி கொன்டு குறுந்தகவல் அனுப்பினால் நிறைய பணம் விரயமாகுமே? அதுதான் இல்லை.
வழக்கமாக இணையத்தில் மேய்வது போன்றே ட்விட்டர்.காம் சென்று பலருக்கும் செய்தி அனுப்பலாம்.வாசகரின் செல்பேசிக்கே செய்திகள் சென்றடவைதால், தொலைபேசி போன்ற உடனடித்தன்மை இங்கே கிடைக்கிறது. அலுவலில் மும்முரமாக மூழ்கி இருந்தாலும், அரை விநாடியே செலவழித்து குறுஞ்செய்தியைப் படித்துவிட்டு, வேலையைத் தொடரலாம். மீட்டிங்கில் இருந்தால் கூட பதில் அனுப்பலாம்.
இதெல்லாம் நான் இப்பொழுதே நண்பர்களுடன் செய்து கொண்டிருக்கின்றேனே! அப்புறம் எதற்கு தனியாக ட்விட்டர்?
- 'கலைஞருக்கு நோபல் ஏன் கிடைக்க வேண்டும்?' என்று பிரச்சாரத்தை ஓசையின்றி முடுக்கி விடலாம்.
- மாணவர்களுடன் உரையாட, தற்கால தலைமுறையின் பாஷையில் ஆசிரியர் உறவாடலாம்.
- பத்து நண்பர்களுக்கு 'விஸ்டா நிறுவ உதவி தேவை' என்று மின்மடலிடுவதை விட, ட்விட்டரில் கோரினால், கை மேல் பலன் நிச்சயம்.
- 'சுப்பிரமணியபுரம்' குறித்து விஷயமே இல்லாமல் பதினேழு வரி எழுதுவதற்கு பதில், நச்சென்று விமர்சனம் கொடுக்கலாம்.
சுருக்கமாக, தெரிந்த நண்பர்களுடன் உரையாடுவதை பொதுவில் தெரிவிக்கவும், தெரியாத உறவுகளுடன் தொடர்புகளை உருவாக்கவும், தொடர்பில்லாத விஷயங்களில் தெளிவான கருத்துக்களைப் பெறவும் பயன்படுகிறது.
ஏன் ட்விட்டர் என்பதை விளங்கிக் கொண்டாடியாச்சு. இதெல்லாம் எப்படி செய்வது: ட்விட்டர் குறித்த எளிய அறிமுகம்.
மேலே உள்ள சுட்டியை க்ளிக்காதவர்களுக்கான அறிமுகம்:
- ட்விட்டர்.காம் சென்று புதிய கணக்கைத் தொடங்கவும்
- நணபர்களை அழைக்கவும். (என்னைப் போன்றோரின் சோத்தங்கை பக்கத்தில் பல புகழ் பெற்ற பதிவர்கள், ட்விட்டரர்கள் இருப்பார்கள்; அவர்களையும் இணைக்கலாம்.)
- 140 எழுத்துக்களுள் நீங்கள் செய்து கொண்டிருப்பதை முழங்கவும்
அவ்வளவுதான்.
ட்விட்டரினால் ஆய பயன் பற்பல.
- சாதாரணமாக நீங்கள் பேசத் தயங்கும் பெருசுகளுடனும் சரி; நீண்ட காலமாக தொடர்பு விட்டுப்போன பால்யகால சிநேகிதிக்கும் சரி; பேச்சைத் துவக்க நெருக்கமான அன்னியோன்யம் கொடுக்கும் சூழல்.
- வணிக நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் குறைகளைக் காது கொடுத்து கேட்கின்றன (Hurry up, the customer has a complaint - The Boston Globe)
- ஃபெட்னா விழா நடக்கிறது. பலராலும் மேடை நிகழ்வை கவனிக்கத்தான் நேரம் சரியாக இருக்கும். கிடைக்கும் ஓரிரு இடைவேளையில் பதிவாக அல்லாமல், குறுந்தகவலாகப் பகிரலாம்.
- 'கத்தாழக் கண்ணால' பாடலுக்கு நடனமாடியவர் யார் போன்ற கேள்விகளுக்கு கூகிள் தேடி தாவு தீராமல் விடையறியலாம்.
- 'தினம் ஒரு திருக்குறள்' என்று சங்க இலக்கியம் தொடங்கி அன்றாட இலக்கிய சர்ச்சை என்று வகைவகையாக தினசரி தொகுக்கலாம்
- இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பக்கம் முதல் விக்கிப்பீடியா பக்கத்தை தொகுக்கும் பணி வரை எதற்கு வேண்டுமானாலும் செல்லமாக திட்டி, தட்டி கொட்டி வேலை வாங்க, ஊக்குவிக்கலாம்.
திரட்டி என்றாலே ஏதாவது சட்ட திட்டம் இருக்குமே? இங்கு உள்ள நடைமுறை என்ன? Twitter Etiquette | Global Geek News Blog
இந்த மாதிரி பழக்கவழக்கம் எல்லாம் சுயமாகவே நிர்ப்பந்தித்துக் கொள்வதேயன்றி, இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும் என்று ட்விட்டர் வலியுறுத்துவதில்லை. ட்விட்டரில் இருப்பவர்களும் 'ஃபாலோ' பட்டனை அமுக்கி, தங்கள் கோபத்தை/விருப்பத்தை தெரிவித்து சென்றுவிடுவார்கள்.
இவ்வளவு தூரம் படித்திருந்து, வலையில் எதெது எதற்கு என்று குழம்பிப் போயிருந்தால்...
பதிவு: விவரமானவை; வித்து; கோர்வையான உள்ளடக்கம். (உங்கள் இடுகையை சுட்டிக் காட்ட வைக்க வேண்டும்.)
குரல் பதிவு: தமிழ் படிக்கத் தெரியாதோரையும் சென்றடையும்; வேறு வேலை செய்துகொண்டே கூட கேட்கலாம். (நேர்காணல், எழுதத் தெரியாதவரின் குரல், இசையோடு கூடியது)
கூட்டுப்பதிவு: ஒத்த லட்சியம் கொண்டவர்களின் பதிவுப் பயணம். (விழா, நிறுவனம், கட்சி, நுட்பம்)
வலைத்திரட்டி: புதிய பதிவர்களுக்கு அடையாள அட்டை; தமிழ்மணம் போன்ற இடங்களில் விளம்பரம்.
தெரிவுத்திரட்டி: விடுபட்டதற்கான அறிமுக அட்டை; கில்லி போன்ற வலையகங்களில் வாசிக்க மறந்ததற்கான புத்தகக்குறி.
மனிதத்திரட்டி: நம்பகமான குறிச்சொல் கொண்டது; மாற்று போன்ற சேவைகளினால் வலையில் இருந்து பகிர்பவை.
விக்கி: புத்துருவாக்கம்; சகாக்களின் திருத்தத்துடன் நம்பகத்தன்மை.
மனித விக்கி: தேடல்களுக்கு எளிமையான முன்னுரை விடை; மஹாலோ போன்ற இடங்களில் பெரும்பான்மையினரால் கோரப்படும் தலைப்புகளுக்கு புகழ்பெற்றவர்களால் புகட்டப்படும் முடிவுகள்.
அரட்டை: சோர்வு மறக்கடிக்கும்; விவாத களத்துக்குரிய லட்சணங்களுடன், வெற்றி/தோல்வி சாரமற்ற காரம்.
மின்னஞ்சல்: பத்து வரிக்கு மிகுந்தால் கவனமின்மை தரும்; எரிதமாகிப் போகும் அபாயம் உண்டு; தன்னந்தனியே பேச வேண்டியது.
கோப்பு: அச்சிடுவதற்கு வசதி; ஸ்க்ரிப்ட் போன்ற தளங்களில் ஏற்கனவே உள்ளூர் கணினியில் உறங்குவதை உலகுக்கு வெளிப்படுத்தலாம்.
குறுஞ்செய்தி/குறுந்தகவல்: உரையாடல் துவக்கம்; பதிவில் தனித்துவம் மிளிரும் என்றால், ட்விட்டரில் பொதுக்குணம் தூக்கல்; சுட்டிகள் புழக்கம் குறைச்சல்; முக்கியமாக 'யார் வந்தார்கள்? எத்தனை வருகையாளர்? எப்படி வந்து சேர்ந்தார்கள்?' என்று அலசும் புள்ளிவிவர ஸ்டாடிஸ்டிக்ஸ் லேது.
நினைப்பதை, விரும்புவதை, வெறுப்பதை, நம்புவதை, விழைவதை எண்ணியவாறே பதிந்து வைக்க, பதிந்ததை பலகோடி மக்களுக்கும் பரப்ப ட்விட்டருக்கு வாங்க!
மேலும் ட்விட்டர் குறித்து அறிய: எளிய அறிமுகம்.
கருத்துப்படம்: gapingvoid: "cartoons drawn on the back of business cards": why i deleted my twitter account
Date: Saturday, 12 Apr 2008 15:39
Date: Tuesday, 08 Apr 2008 08:06
அன்புள்ள நண்பருக்கு,
வணக்கம்.
ஒரு மாற்றிதழுக்கான முயற்சியாக மே ஒன்று முதல் "மணல் வீடு" என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம்.
கலை, இலக்கியத்தோடு மட்டும் நில்லாது நாட்டார்வழக்கியல்,விளிம்பு நிலை வாழ்வியல் என இன்னும் பல கூறுகளை - தமிழ் நிகழ் உலகம் அதிகம் தொடாத இடங்களை பதிவு செய்யும் முனைப்போடு "மணல் வீடு" இயங்கும்.
இந்த மாற்றிதழ் முயற்சியில் தங்களையும் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம்.
படைப்புகளை இம்மின்னஞ்சல் (manalveedu@gmail.com) முகவரிக்கு அனுப்பலாம்.
சந்தா விவரம்:
ஆண்டுச் சந்தா : ரூ 100
ஐந்தாண்டுச் சந்தா: ரூ 500
சந்தாவை ஐசிஐசிஐ வங்கியில் பின்வரும் கணக்கு எண்ணில் செலுத்தலாம். A/C:611901517766
தங்களின் ஆதவரவினை வரவேற்கிறோம்.
மிக்க அன்புடன்,
மணல் வீடு குழுமத்தார்.
தொடர்பு மற்றும் வெளியீடு:
மு.ஹரிகிருஷ்ணன்,
ஏர்வாடி,
குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636453
தொடர்பு எண்: 98946 05371
வணக்கம்.
ஒரு மாற்றிதழுக்கான முயற்சியாக மே ஒன்று முதல் "மணல் வீடு" என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம்.
கலை, இலக்கியத்தோடு மட்டும் நில்லாது நாட்டார்வழக்கியல்,விளிம்பு நிலை வாழ்வியல் என இன்னும் பல கூறுகளை - தமிழ் நிகழ் உலகம் அதிகம் தொடாத இடங்களை பதிவு செய்யும் முனைப்போடு "மணல் வீடு" இயங்கும்.
இந்த மாற்றிதழ் முயற்சியில் தங்களையும் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம்.
படைப்புகளை இம்மின்னஞ்சல் (manalveedu@gmail.com) முகவரிக்கு அனுப்பலாம்.
சந்தா விவரம்:
ஆண்டுச் சந்தா : ரூ 100
ஐந்தாண்டுச் சந்தா: ரூ 500
சந்தாவை ஐசிஐசிஐ வங்கியில் பின்வரும் கணக்கு எண்ணில் செலுத்தலாம். A/C:611901517766
தங்களின் ஆதவரவினை வரவேற்கிறோம்.
மிக்க அன்புடன்,
மணல் வீடு குழுமத்தார்.
தொடர்பு மற்றும் வெளியீடு:
மு.ஹரிகிருஷ்ணன்,
ஏர்வாடி,
குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636453
தொடர்பு எண்: 98946 05371
மின்னஞ்சலில் வந்திருந்தது.
Date: Friday, 29 Feb 2008 10:55
கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்
இணையத்தில் கிடைக்கப்பெற்ற அந்த வார கல்கியின் இரண்டொரு பக்கங்களை அச்சுப் பிரதி எடுத்து வந்திருந்தேன். தவறுதலாக தரையில் விழுந்திருந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஓடி வந்தாள். இலையுதிர் மரங்களில் இருந்து விழும் வண்ணம் மாறிய இதழ்களை கவனியாமல் அவசரமாக ஓடும் நதி போல் அவற்றை மிதித்துக் கொண்டே அன்றைய தினத்தில் நடந்தவற்றை சொல்லி முடிக்கும் வேகத்துடன் விவரித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கையமர்த்தி, 'எதன் மேல் நிற்கிறாய் தெரியுமா? சரஸ்வதி!' தொட்டு ஒத்திக் கொள்!' என்று கோபமும் அதிகாரமும் கலந்த அணைக்கட்டாய் அவளை நிறுத்தினேன்.
'பின் சீட்' தொகுப்பில் வரும் கதைகளும் இப்படித்தான். வாழ்க்கையில் புறக்கணிக்க எத்தனிக்கும் விழுமியங்களையும் மறக்க விரும்பும் கோட்பாடுகளையும் விட்டுவிட்ட கலாச்சாரக் குழப்பங்களையும் முரணாக வினாக்கள் ஆக்கும் தொகுப்பு.
மொத்தம் பதினாறு சிறுகதைகள்.
சிங்கை சஞ்சிகைகள் கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியானவற்றின் தொகுப்பாக மதி நிலையத் தொகுப்பாக வெளியாகியுள்ளது. ஒவ்வொன்றிலும் பலவிதமான நாயகர்கள் தென்படுகிறார்கள். அம்மா கோந்துகள். மக்கள் செல்வம் தங்களுடன் பசையாக இருக்க விரும்பும் பெற்றோர்கள்; பற்றற்ற மாந்தர்கள்; ஆசையை விட நினைப்பவர்கள்; விட்டதாக நினைப்பவர்கள். எல்லோரையும் உலாவ விட்டு அடர்த்தியான கதைகளில் மூழ்க வைக்கிறார் ஜெயந்தி சங்கர்.
நகைச்சுவை அரிதாகவே எட்டிப் பார்க்கிறது. வெரைட்டியான சிங்கப்பூரில் உரையாடல்களின் செழுமை மூலம் எட்டு திசைகளாக விரியும் சம்பவங்கள். நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. கரும்பு ரசம் போன்ற சுவைநீர், கடலில் திடீரென்று கலந்து உப்புத் தண்ணீர் ஆகிறது.
'அம்மா பேசினாள்' கிரியும் மகாமக நதியாக சாதிக்க நினைத்து ஓடிப் போய் களைக்கிறான். குடிக்கத் தகுதியற்ற நீரானாமோ என்று சோம்பித் துவளாமல், கயலும் கெண்டையும் எதிர்நீச்சலடிக்கும் சூழலை அமைத்துத் தர ஆசைப்படுகிறான்.
புத்தகத்தின் தலைப்புக் கதையான 'பின் சீட்' தமிழ் சினிமா போல் சூடான திரைக்கதையாக விரிகிறது. சிறு வயது மதிப்பீடு போராட்டங்களினால் ஏற்படும் நெருக்குதல்கள்; பெண்களைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்; நாயகி தீபா, 'தம்பிக்கு எந்த ஊரு' ரஜினியாக மனமாற்றம் அடைதல்; நம்பர் ஒண்ணாக இருப்பதை விட உச்சங்களைத் தொடுபவர்களை உருவாக்கும் மனப்பக்குவத்தை எட்டுதல் போன்ற மேலாணமையும் மசாலாவும் கலந்த கதை.
நிறம் பார்த்தோ வயசைப் பார்த்தோ அன்பு உருவாகாது. 'மிருகா' என்றழைக்கும் கிழவியின் பாசம்; ரங்கோலியாக வாழ்க்கையை ரசிக்கும் கிழவியின் பவள வளையல் குறியீடு; உற்றவருக்கு உடல்நலம் சரியில்லை என்னும்போது உள்ளார்ந்து எழும் மனக்கிலேசம்; கோடை கால நூறு பாகை வெப்பம் எல்லோரையும் சுட்டெரிக்கும்.
சத்தியமான சூரியனின் கதிர் போல் அனைவருக்குள்ளும் தகிக்க வைக்கும் மனிதத்தை வெளிக்கொணரும் கவிதையான கதை 'ஜேட் வளையல்'.
பெண் எழுத்தாளரின் மெல்லிய குரல் வெளிப்படும் ஆக்கமாக 'அக்கா'. வீடற்ற முதியவர்களின் நிலை குறித்து உணர்த்தும் 'திரவியம்'. வீடிருந்தும் வாசலிருந்தும் அனாதரவாகி அன்னியப்படும் மாடி வீடுகளைத் தொடும் 'எந்தையும் தாயும்'.
ஒவ்வொன்றும் முத்திரைக் கதைகள். அக்கா மற்றும் திரவியம் சிறப்பாக எடுத்தாளப்பட்டிருந்தாலும், பளிச்சென்ற முடிவுகளும், அவை உணர்த்தும் தீர்ப்புகளும் சற்றே நெருடலாகவே உள்ளன. உரத்துப் பேசாமல் உணர்ச்சிகளை மட்டும் பேச விட்டிருந்தால் மேலும் மெருகேறியிருக்கும்.
இதே பாணியில் 'அப்பாவின் மனைவி' நாவலுக்குரிய செறிவுடனும் கதாபாத்திரங்களும் கொண்டிருக்கிறது. 'தலைச்சன்' அப்பாவின் மனமாற்றங்களும் சடாரென்று நிகழ்ந்து நம்ப இயலாதவொன்றாக ஆக்குகிறது. ஆசிரியர் இதே பின்புலத்துடன் விரிவாக பிறிதொரு புனைவு வடிவத்தில் இவற்றைக் விரிவாகக் கையாண்டால் நிறைவாக இருந்திருக்கும்.
ஜெயந்தி சங்கரின் பல கதைகளில் போதனையும் ஊடே இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக 'உன் காலணிக்குள் நான்' பள்ளிக்கூட Moral Science பாடம் போல் தென்பட்டது.
குடிகாரனின் லீலைகளை விவரிக்கும் 'நான் அவனில்லை'யும் மகப்பேறின் மகத்துவத்தை முன்வைக்கும் 'மழலைசொல் கேளாதவ'ரும் திறம்படக் கையாண்டிருந்தால், தற்போதைய நிலையில் வாசகனுக்கு குற்றவுணர்வு கலந்த அயர்ச்சிக்கு பதிலாக, சரியான தாக்கங்களைக் கொடுத்திருக்கும்.
இந்தத் தொகுப்பில் நான் முன்னமே வாசித்திருந்தது 'கடைசிக் கடிதம்' மட்டுமே. மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கும் முன்னே மனத்தில் தங்கிப் போன நினைவுகளை மீட்டெடுத்து, மீள்வாசிப்பில் மறக்கவியலாத நாவலின் பன்முகப்பரிமாணங்களை வாசகனுக்குள் பாய்ச்சும் தன்மையுடன் விரிந்தது. பிரச்சினைகளைக் கண்டு ஓட வேண்டுமா? தன்னால் தீர்வு காண முடியாத அச்சத்தால், பிறரின் முடிவுக்கே விட்டுச் செல்வது சிறந்ததா? பேசாப்பொருளை எப்படி அறிமுகம் செய்வது? வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் சரிதானா? தவறு என்றால் எப்போது மாற்றிக் கொள்ளலாம்? மன்னிப்பு எதற்கு தேவை? யாருக்கு பாவம்? யார் பாவம்?
ஒவ்வொரு கதையிலும் வினாக்களும் கதாவாசகனின் அனுபவங்களுக்கு ஏற்ற அர்த்தங்களும் புலப்பட்டாலும், அவை யாவும் மிக சிறப்பாக 'கடைசிக்கடித'த்தில் வெளியாகியுள்ளது.
மஞ்சள் ரிப்பன், ஸ்பாஸிர்ரிஸ் போன்ற வினோத பதங்களை சிங்கப்பூரை எழுத்தில் மட்டுமே தரிசித்தவர்களுக்காக இன்னும் விரிவாக எடுத்துரைத்து லாவகமாக கதையில் விவரித்து, தெரியாத விஷயங்களை அறிமுகம் செய்வித்திருக்கலாம்.
கதைகளில் பெரும்பாலானோர் குற்றமற்ற உத்தமராக இருப்பதை போல் வார்த்தைகளில் வரும் பிழைகளைக் களைந்தெடுத்தால் வாசிப்பு ஈர்ப்பு அதிகரிக்கும். பாரத கண்டத்தை விட்டுப் போனாலும் தீபாவளி கொண்டாடுவது தொடர்கிறது. பத்தாவது படிக்கும் வரை ஆயிரம் வாலா-வா அல்லது அணுக்கத்தில் ஆட்டம் பாம் போடுவதா என்னும் போட்டா போட்டி. கொஞ்சம் கெத்து வந்த வயதில் ரேமண்ட்ஸே வாங்கித் தைக்க அப்பா தயார் என்றாலும் கேப் காக்கியோ, ஏபர்கோம்பி ·பிட்ச் பொன்னெழுத்துப் பொறிக்கப்பட்ட ஆடையோ தாங்கி உலா வரும் ஒளிக்கதிர் போட்டி.
தலை தீபாவளிக்கு மிடுக்கு; ஊர் விட்டு ஊர் வந்திருந்த போது கொண்டாடிய ராம் லீலா மேளா; அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ, அயல்நாட்டில் இருக்கும் பத்து தெற்காசிய குடும்பங்களைக் கஷ்டப்பட்டு ஒன்றுகூட்டி திருவிழா கொண்டாட்டம்.
பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு தள்ளி இருந்தாலும், தடாலடியாக பண்டிகை தினத்தன்று 'உள்ளேன் அய்யா' போட்டு, சாப்பிடத்தெரியாத தலைவாழை இலையில் அஜீரணம் தரும் எண்ணெய் சமாச்சாரம் தொட்டு திரட்டிப்பால் இரண்டாம் முறை வாங்கி, பூண்டு ரசத்தை கொஞ்சம் தரையில் இருந்து எடுத்து இலைக்குள் தள்ளி, தயிர் சாதத்துக்குப் பிறகு இராஜாவாக பிறக்கும் ஆசையில் பாயசம் சாப்பிட சிரம்பப்பட்டாலும் வயிறு முட்ட வைக்கிறது பின் சீட் தொகுப்பு. சுற்றாரும் வம்பும் இனிப்பும் தீபாவளி லேகியமும் கலந்து பூர்விகத்தை திரும்பிப் பார்க்க சொல்லும் விருந்து.
பின் சீட் (2006)
ஆசிரியர் - ஜெயந்தி சங்கர்
பக்கங்கள் - 153/ விலை- Rs 66
மதி நிலையம்
நன்றி: வடக்கு வாசல் ஃபிப்ரவரி 2008
தொடர்புள்ள பதிவு: சிங்கை முரசு: எளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள் - பனசை நடராஜன்:
அருள் குமரன்: அம்மா பேசினாள், தலைச்சன், மறுபக்கம், கடைக் கடிதம் போன்ற சிறுகதைகளைக் குறித்து விரிவாகச் சொன்னார். பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வை, அவரது சொந்த அனுபவமோ என்று சந்தேகித்துவிடும் அளவுக்கு எதார்த்தமாய், வாசகனை உள்ளிழுத்துச் செல்லும் வகையில் மிகைப் படுத்தாமல் அருகில் அமர்ந்து சொல்வது போன்ற உணர்வுடன் நூலாசிரியர் சொல்லியிருப்பதாகக் கூறி வியந்தார்.
தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்ட முதியவர் ஒருவர் எழுந்து சிங்கப்பூரில் கதை எழுத கரு கிடைக்கவில்லை என்று தான் நினைத்திருக்கையில் இவ்வளவு திறம்பட சிங்கப்பூர் சூழல்களைக் கையாண்டு எழுதிவருகிறீர்களே என்று சொல்லிப் பாராட்டியதோடு, தகுந்த அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று அக்கறையுடன் கூறினார்.
இணையத்தில் கிடைக்கப்பெற்ற அந்த வார கல்கியின் இரண்டொரு பக்கங்களை அச்சுப் பிரதி எடுத்து வந்திருந்தேன். தவறுதலாக தரையில் விழுந்திருந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஓடி வந்தாள். இலையுதிர் மரங்களில் இருந்து விழும் வண்ணம் மாறிய இதழ்களை கவனியாமல் அவசரமாக ஓடும் நதி போல் அவற்றை மிதித்துக் கொண்டே அன்றைய தினத்தில் நடந்தவற்றை சொல்லி முடிக்கும் வேகத்துடன் விவரித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கையமர்த்தி, 'எதன் மேல் நிற்கிறாய் தெரியுமா? சரஸ்வதி!' தொட்டு ஒத்திக் கொள்!' என்று கோபமும் அதிகாரமும் கலந்த அணைக்கட்டாய் அவளை நிறுத்தினேன்.
'பின் சீட்' தொகுப்பில் வரும் கதைகளும் இப்படித்தான். வாழ்க்கையில் புறக்கணிக்க எத்தனிக்கும் விழுமியங்களையும் மறக்க விரும்பும் கோட்பாடுகளையும் விட்டுவிட்ட கலாச்சாரக் குழப்பங்களையும் முரணாக வினாக்கள் ஆக்கும் தொகுப்பு.
மொத்தம் பதினாறு சிறுகதைகள்.
சிங்கை சஞ்சிகைகள் கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியானவற்றின் தொகுப்பாக மதி நிலையத் தொகுப்பாக வெளியாகியுள்ளது. ஒவ்வொன்றிலும் பலவிதமான நாயகர்கள் தென்படுகிறார்கள். அம்மா கோந்துகள். மக்கள் செல்வம் தங்களுடன் பசையாக இருக்க விரும்பும் பெற்றோர்கள்; பற்றற்ற மாந்தர்கள்; ஆசையை விட நினைப்பவர்கள்; விட்டதாக நினைப்பவர்கள். எல்லோரையும் உலாவ விட்டு அடர்த்தியான கதைகளில் மூழ்க வைக்கிறார் ஜெயந்தி சங்கர்.
நகைச்சுவை அரிதாகவே எட்டிப் பார்க்கிறது. வெரைட்டியான சிங்கப்பூரில் உரையாடல்களின் செழுமை மூலம் எட்டு திசைகளாக விரியும் சம்பவங்கள். நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. கரும்பு ரசம் போன்ற சுவைநீர், கடலில் திடீரென்று கலந்து உப்புத் தண்ணீர் ஆகிறது.
'அம்மா பேசினாள்' கிரியும் மகாமக நதியாக சாதிக்க நினைத்து ஓடிப் போய் களைக்கிறான். குடிக்கத் தகுதியற்ற நீரானாமோ என்று சோம்பித் துவளாமல், கயலும் கெண்டையும் எதிர்நீச்சலடிக்கும் சூழலை அமைத்துத் தர ஆசைப்படுகிறான்.
புத்தகத்தின் தலைப்புக் கதையான 'பின் சீட்' தமிழ் சினிமா போல் சூடான திரைக்கதையாக விரிகிறது. சிறு வயது மதிப்பீடு போராட்டங்களினால் ஏற்படும் நெருக்குதல்கள்; பெண்களைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல்; நாயகி தீபா, 'தம்பிக்கு எந்த ஊரு' ரஜினியாக மனமாற்றம் அடைதல்; நம்பர் ஒண்ணாக இருப்பதை விட உச்சங்களைத் தொடுபவர்களை உருவாக்கும் மனப்பக்குவத்தை எட்டுதல் போன்ற மேலாணமையும் மசாலாவும் கலந்த கதை.
- மேலை நாட்டுக் கலாச்சாரமான concierge services-ஐ அறிமுகப்படுத்தும் 'சேவை';
- மக்களை எடை போட்டு நிர்தாட்சண்யமாக்கும் நிறவெறியையும், செல்நெறி தேர்ந்ந்தெடுத்தல் குழப்பங்களையும் வெளிக்கொணரும் 'கண்ணாலே பேசிப் பேசி';
- காலத்திற்கேற்ப காலணிக்குள் நுழைந்து பொருத்திக் கொண்ட ஏபிசிடிக்களையும், பழைய செருப்புக்குள் தைத்து விடப்பார்ர்ப்பவர்களின் நடுக்கங்களையும் சமாதானப்படுத்தும் 'பார்வை'.
- பல்வேறு களங்களில் பயணிக்கும் சிற்றருவிகள். ஓடத்தில் பேரருவியாக என்னை மிகவும் ஆர்ப்பரிக்க வைத்தவையாக 'ஜேட் வளையல்',எந்தையும் தாயும், அக்கா மற்றும் திரவியம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
நிறம் பார்த்தோ வயசைப் பார்த்தோ அன்பு உருவாகாது. 'மிருகா' என்றழைக்கும் கிழவியின் பாசம்; ரங்கோலியாக வாழ்க்கையை ரசிக்கும் கிழவியின் பவள வளையல் குறியீடு; உற்றவருக்கு உடல்நலம் சரியில்லை என்னும்போது உள்ளார்ந்து எழும் மனக்கிலேசம்; கோடை கால நூறு பாகை வெப்பம் எல்லோரையும் சுட்டெரிக்கும்.
சத்தியமான சூரியனின் கதிர் போல் அனைவருக்குள்ளும் தகிக்க வைக்கும் மனிதத்தை வெளிக்கொணரும் கவிதையான கதை 'ஜேட் வளையல்'.
பெண் எழுத்தாளரின் மெல்லிய குரல் வெளிப்படும் ஆக்கமாக 'அக்கா'. வீடற்ற முதியவர்களின் நிலை குறித்து உணர்த்தும் 'திரவியம்'. வீடிருந்தும் வாசலிருந்தும் அனாதரவாகி அன்னியப்படும் மாடி வீடுகளைத் தொடும் 'எந்தையும் தாயும்'.
ஒவ்வொன்றும் முத்திரைக் கதைகள். அக்கா மற்றும் திரவியம் சிறப்பாக எடுத்தாளப்பட்டிருந்தாலும், பளிச்சென்ற முடிவுகளும், அவை உணர்த்தும் தீர்ப்புகளும் சற்றே நெருடலாகவே உள்ளன. உரத்துப் பேசாமல் உணர்ச்சிகளை மட்டும் பேச விட்டிருந்தால் மேலும் மெருகேறியிருக்கும்.
இதே பாணியில் 'அப்பாவின் மனைவி' நாவலுக்குரிய செறிவுடனும் கதாபாத்திரங்களும் கொண்டிருக்கிறது. 'தலைச்சன்' அப்பாவின் மனமாற்றங்களும் சடாரென்று நிகழ்ந்து நம்ப இயலாதவொன்றாக ஆக்குகிறது. ஆசிரியர் இதே பின்புலத்துடன் விரிவாக பிறிதொரு புனைவு வடிவத்தில் இவற்றைக் விரிவாகக் கையாண்டால் நிறைவாக இருந்திருக்கும்.
ஜெயந்தி சங்கரின் பல கதைகளில் போதனையும் ஊடே இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக 'உன் காலணிக்குள் நான்' பள்ளிக்கூட Moral Science பாடம் போல் தென்பட்டது.
குடிகாரனின் லீலைகளை விவரிக்கும் 'நான் அவனில்லை'யும் மகப்பேறின் மகத்துவத்தை முன்வைக்கும் 'மழலைசொல் கேளாதவ'ரும் திறம்படக் கையாண்டிருந்தால், தற்போதைய நிலையில் வாசகனுக்கு குற்றவுணர்வு கலந்த அயர்ச்சிக்கு பதிலாக, சரியான தாக்கங்களைக் கொடுத்திருக்கும்.
இந்தத் தொகுப்பில் நான் முன்னமே வாசித்திருந்தது 'கடைசிக் கடிதம்' மட்டுமே. மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கும் முன்னே மனத்தில் தங்கிப் போன நினைவுகளை மீட்டெடுத்து, மீள்வாசிப்பில் மறக்கவியலாத நாவலின் பன்முகப்பரிமாணங்களை வாசகனுக்குள் பாய்ச்சும் தன்மையுடன் விரிந்தது. பிரச்சினைகளைக் கண்டு ஓட வேண்டுமா? தன்னால் தீர்வு காண முடியாத அச்சத்தால், பிறரின் முடிவுக்கே விட்டுச் செல்வது சிறந்ததா? பேசாப்பொருளை எப்படி அறிமுகம் செய்வது? வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் சரிதானா? தவறு என்றால் எப்போது மாற்றிக் கொள்ளலாம்? மன்னிப்பு எதற்கு தேவை? யாருக்கு பாவம்? யார் பாவம்?
ஒவ்வொரு கதையிலும் வினாக்களும் கதாவாசகனின் அனுபவங்களுக்கு ஏற்ற அர்த்தங்களும் புலப்பட்டாலும், அவை யாவும் மிக சிறப்பாக 'கடைசிக்கடித'த்தில் வெளியாகியுள்ளது.
மஞ்சள் ரிப்பன், ஸ்பாஸிர்ரிஸ் போன்ற வினோத பதங்களை சிங்கப்பூரை எழுத்தில் மட்டுமே தரிசித்தவர்களுக்காக இன்னும் விரிவாக எடுத்துரைத்து லாவகமாக கதையில் விவரித்து, தெரியாத விஷயங்களை அறிமுகம் செய்வித்திருக்கலாம்.
கதைகளில் பெரும்பாலானோர் குற்றமற்ற உத்தமராக இருப்பதை போல் வார்த்தைகளில் வரும் பிழைகளைக் களைந்தெடுத்தால் வாசிப்பு ஈர்ப்பு அதிகரிக்கும். பாரத கண்டத்தை விட்டுப் போனாலும் தீபாவளி கொண்டாடுவது தொடர்கிறது. பத்தாவது படிக்கும் வரை ஆயிரம் வாலா-வா அல்லது அணுக்கத்தில் ஆட்டம் பாம் போடுவதா என்னும் போட்டா போட்டி. கொஞ்சம் கெத்து வந்த வயதில் ரேமண்ட்ஸே வாங்கித் தைக்க அப்பா தயார் என்றாலும் கேப் காக்கியோ, ஏபர்கோம்பி ·பிட்ச் பொன்னெழுத்துப் பொறிக்கப்பட்ட ஆடையோ தாங்கி உலா வரும் ஒளிக்கதிர் போட்டி.
தலை தீபாவளிக்கு மிடுக்கு; ஊர் விட்டு ஊர் வந்திருந்த போது கொண்டாடிய ராம் லீலா மேளா; அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ, அயல்நாட்டில் இருக்கும் பத்து தெற்காசிய குடும்பங்களைக் கஷ்டப்பட்டு ஒன்றுகூட்டி திருவிழா கொண்டாட்டம்.
பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு தள்ளி இருந்தாலும், தடாலடியாக பண்டிகை தினத்தன்று 'உள்ளேன் அய்யா' போட்டு, சாப்பிடத்தெரியாத தலைவாழை இலையில் அஜீரணம் தரும் எண்ணெய் சமாச்சாரம் தொட்டு திரட்டிப்பால் இரண்டாம் முறை வாங்கி, பூண்டு ரசத்தை கொஞ்சம் தரையில் இருந்து எடுத்து இலைக்குள் தள்ளி, தயிர் சாதத்துக்குப் பிறகு இராஜாவாக பிறக்கும் ஆசையில் பாயசம் சாப்பிட சிரம்பப்பட்டாலும் வயிறு முட்ட வைக்கிறது பின் சீட் தொகுப்பு. சுற்றாரும் வம்பும் இனிப்பும் தீபாவளி லேகியமும் கலந்து பூர்விகத்தை திரும்பிப் பார்க்க சொல்லும் விருந்து.
பின் சீட் (2006)
ஆசிரியர் - ஜெயந்தி சங்கர்
பக்கங்கள் - 153/ விலை- Rs 66
மதி நிலையம்
நன்றி: வடக்கு வாசல் ஃபிப்ரவரி 2008
தொடர்புள்ள பதிவு: சிங்கை முரசு: எளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள் - பனசை நடராஜன்:
ராம. கண்ணபிரான்: கதாமாந்தர்களை அறியா பருவத்தினர் மற்றும் அறிந்த பருவத்தினர் என்று வகைப் படுத்துவதாகக் கூறினார். பதின்பருவத்தினரின் உடல், மன மாற்றங்கள், அவர்களுடைய நண்பர்களின் அணுகுமுறையால் முக்கியத்துவம் பெறுகிறதென்றும், அறிந்த மனிதர்களிடம் தான் தியாக மனப்பான்மையும் மோசமான குணங்களையும் ஒருங்கே பார்க்க முடிகிறது என்றும் சொன்னார்.
அருள் குமரன்: அம்மா பேசினாள், தலைச்சன், மறுபக்கம், கடைக் கடிதம் போன்ற சிறுகதைகளைக் குறித்து விரிவாகச் சொன்னார். பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வை, அவரது சொந்த அனுபவமோ என்று சந்தேகித்துவிடும் அளவுக்கு எதார்த்தமாய், வாசகனை உள்ளிழுத்துச் செல்லும் வகையில் மிகைப் படுத்தாமல் அருகில் அமர்ந்து சொல்வது போன்ற உணர்வுடன் நூலாசிரியர் சொல்லியிருப்பதாகக் கூறி வியந்தார்.
தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்ட முதியவர் ஒருவர் எழுந்து சிங்கப்பூரில் கதை எழுத கரு கிடைக்கவில்லை என்று தான் நினைத்திருக்கையில் இவ்வளவு திறம்பட சிங்கப்பூர் சூழல்களைக் கையாண்டு எழுதிவருகிறீர்களே என்று சொல்லிப் பாராட்டியதோடு, தகுந்த அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று அக்கறையுடன் கூறினார்.
Date: Tuesday, 15 Jan 2008 10:06
தேன் - தோணித்துறைகளும் மதுக்கிண்ணங்களும்
நன்றி: தமிழோவியம்
தேன் என்பது சிறில் அலெக்ஸ் வைத்திருக்கும் வலைப்பதிவின் பெயர். கணிப்பொறியில் கிடைக்கும். அதே போல் அரிதான இன்னொரு அமிர்தம் புட்டியில் கிடைக்கிறது. அந்த வஸ்துவின் பெயர் அப்சிந்த் (Absinthe).
'செய்ய முடியாது. பருக இயலாது' என்று தடா போட்ட அமெரிக்காவில் நேற்றுதான் புழங்க ஆரம்பித்திருக்கிறது இந்த அப்சிந்த். வழக்கமான சரக்குதான். அப்சிந்த்தில் கொஞ்சம் கிக் ஜாஸ்தி. மற்ற சரக்குகளில் எல்லாம் அதிகபட்சமாய் நாற்பது சதவீதம் ஆல்கஹால் கலந்தால், அப்சிந்த்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு மதுவை தூக்கி நிறுத்தி, உடனடியாக பரவசம் அடைய ஏதுவாக்கி இருக்கிறார்கள். இது போதாது என்று ஜவ்வாது, குங்குமப்பூ போன்ற மூலிகைகளும் லாகிரிகளும் சரியான விகிதாசாரங்களில் அப்சிந்த்தின் சுருதியை ஏற்றி களியாட்டம் போட வைக்கிறது.
சிறிலின் பதிவுகளும் இந்த அப்சிந்த்தை ஒத்து இருக்கிறது.
'நனவோடை, நினைவலைகள் எல்லாம் வயசானப் பெருசுதான் எழுதணும்; சொந்த ஊர் புராணம் எல்லாம் புகழ்பெற்றவர் எழுதினால்தான் எடுபடும்' போன்ற பொடாக்களை உடைத்தெறிந்திருக்கிறார்.
புனைவுகளில் சுருக்கமாக கதையின் ஓட்டத்தோடு களமும் கிராமந்தரங்களும் வந்து போகும். இங்கே நடுநாயகமாக தீர்க்கமாக முழு வீச்சுடன் முட்டம் ஹீரோவாகிறது. மனிதப் பிரளயமாய் கதாபாத்திரங்களை கற்பனையாக்காமல், சனங்களை அன்னியோன்யமாய் தெரியவைக்கிறார். வீரியம் அதிகமானாலும் வீச்சு குறையாமல் நெருங்கி அரவணைக்கிறது.
அப்சிந்த் போன்ற சரக்குகளுக்கு மக்களிடம் அறிமுகம் அதிகம் இல்லை. அதற்கென்று தனித்துவ வாசம் உண்டு. திருட்டுத்தனமாக கடத்திய காலம் முதல் அரிதாக தென்படும் இன்றைய நிலை வரை கள்ளின் ருசியறிந்து ஆகர்ஷிப்பவர்களை குஷிப்படுத்தி நிறைவாக்கும் பண்டம்.
களிப்பதற்கென்று எழுதாமல் கருத்தில் வந்ததை எழுதும் இடம் வலைப்பதிவுகள். அதை சரியாக பிரயோகித்திருக்கிறார் சிறில். வெகுசன ஊடகங்களில், நிழலில் விழாத இடத்தில் பதிந்ததை, பொதுமக்களிடம் கொண்டு செல்லும் சாதனமாக இந்த புத்தகம் அமைகிறது.
புகழ்பெற்ற ஓவியர்களான பிகாஸொ, வான்கோ தொடங்கி எழுத்தாளர்கள் ஹெமிங்வே தொட்டு தற்கால ஆஸ்கார் நடிகர்கள் ஜானி டெப் உட்பட அனைவருக்கும் அப்சிந்த் ஆதர்சம்.
வலைக்குறிப்புகளுக்கும் அப்சிந்த் போன்ற கொண்டாட்ட நிலை. எண்ணிக்கை குறித்து அஞ்சாமல் எண்ணங்களை பதிந்து வைக்கும் தடம்.
English360.com மேற்கொண்ட ஆய்வை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். பீங்கான் சாமன்களை செய்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கும் வகுப்பை இரண்டாகப் பிரித்தார் ஆசிரியர். முதல் பாதியிடம் 'உங்கள் பீங்கன் பாத்திரத்தின் தரமும் தன்மையும்தான் முக்கியம்' என்கிறார். மீதி பாதியிடம் 'தரத்தைக் குறித்து அஞ்ச வேண்டாம்; நீங்கள் தயாரிக்கும் எண்ணிகையை அளந்தே மதிப்பிடுவேன்' என்கிறார்.
இரண்டு குழுவில் எந்தக் குழு உயர்தரமான பீங்கான் பொருள்களைத் தயாரித்திருக்கும்? இரண்டாவது குழுதான் வெற்றி பெற்றது.
புத்தகம் எழுதும்போது பக்க அளவு வைத்திருப்போம். பத்திரிகைகளுக்கு என்றால் நாற்பது வரிகள் அல்லது நானூறு வார்த்தை என்று ஏதோ லிமிட் கத்திரி இருக்கும். இங்கே க்வான்டிடி பற்றி கவலைப்படாமல் எழுதுவதால் சிறில் சரக்கு க்வாலிடியாக இருக்கிறது.
சிறிலுக்கு பக்க எண்ணிக்கை லட்சியங்கள் கிடையாது. அனுபவித்த ஒவ்வொன்றையும் உருவாக்கும் எண்ணம் மட்டுமே கொண்டு வலைப்பதிவுகளில் அன்றாடம் யதார்த்த மொழியில் தன்னுடைய வாழ்க்கையை இளமைப் பிராயத்தை தங்கு தடையின்றி எழுதியிருக்கிறார். அது தரத்திலும் மிளிர்கிறது.
துறைமுகங்களுக்கு அருகில் தோணித்துறைகள் இருக்கும். பெருங்கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி துறைமுகங்களை ஆக்கிரமித்திருக்கும். தோணித்துறைகளில் அந்த கப்பல்களில் வந்த பெட்டிகள் ரகவாரியாக பிரிக்கப்படும். தண்ணீரோடு துண்டிக்கப்பட்ட உறவை கோர்க்கும் பாலமாக செயல்படும். சாலைவழியோடு இணைக்கும். சரக்கு ரயில்களில் ஏற்றிச் செல்ல வழிவகுக்கும். ஆசுவாசப்படுத்தி இயல்பாக்கும்.
செயற்கை துறைமுகத்தில் கப்பல்களாக அணுக முடியாத இலக்கியமாக இல்லாமல் எளிமையான உறவை கொடுக்கும் தோணித்துறையாக இந்த முட்டம் அமைந்திருக்கிறது.
கடைசியாக அப்சிந்த்தைக் குடிப்பதற்கு என்று மெக்சிகோ டெக்கீலாவைப் போலவே சாஸ்திரோப்தங்கள் உண்டு. இரண்டு இன்ச் குழியுள்ள தேக்கரண்டியில் சக்கரைக் கட்டிகளை இட வேண்டும். இப்பொழுது இங் ஃபில்லரால் மூன்று சொட்டு அப்சிந்த்தை அதன் மேல் தெளிக்கவும். உடனடியாக வத்திப்பெட்டி உதவியுடன் திரவத்தை பற்ற வைக்கவும். கொஞ்சூண்டு சர்க்கரை மீதம் இருக்கும். அதன் மேல் குளிர்ந்த அக்வாஃபினாவோ தாஸனியோ சுத்த தண்ணீரை ஊற்றவும். இப்பொழுது கோப்பை மேக மூட்டம் கொண்டிருக்கும்.
அப்சிந்த் என்பது சிறிலின் பதிவுகள். அதற்கு அஸ்கா கட்டிகளாக அந்தப் பதிவுக்கு வரும் மறுமொழி பதில்கள். இந்த வாசகர் கேள்விகளும் பின்னூட்டங்களும் சில துளிகளை தெளிக்க, எல்லாமும் கலந்துருகும் கலயமாக இந்த புத்தகக் கோப்பை.
மகிழ்ச்சியுடன் சிந்தை முட்ட முட்ட அமிர்தம் குடிக்க வாழ்த்துகள்.
1. பிறர் எழுதிய அணிந்துரைகளை வாசிக்க: முட்டம் புத்தகம் பதிவர்கள் பார்வையில்
2. புத்தகம் குறித்த அறிமுகம்: முதன் முதலாக வலைப்பதிவு புத்தகமாகிறது
3. விருபா: 2008 புத்தகத்திருவிழா - ஆழி
நன்றி: தமிழோவியம்
தேன் என்பது சிறில் அலெக்ஸ் வைத்திருக்கும் வலைப்பதிவின் பெயர். கணிப்பொறியில் கிடைக்கும். அதே போல் அரிதான இன்னொரு அமிர்தம் புட்டியில் கிடைக்கிறது. அந்த வஸ்துவின் பெயர் அப்சிந்த் (Absinthe).
'செய்ய முடியாது. பருக இயலாது' என்று தடா போட்ட அமெரிக்காவில் நேற்றுதான் புழங்க ஆரம்பித்திருக்கிறது இந்த அப்சிந்த். வழக்கமான சரக்குதான். அப்சிந்த்தில் கொஞ்சம் கிக் ஜாஸ்தி. மற்ற சரக்குகளில் எல்லாம் அதிகபட்சமாய் நாற்பது சதவீதம் ஆல்கஹால் கலந்தால், அப்சிந்த்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு மதுவை தூக்கி நிறுத்தி, உடனடியாக பரவசம் அடைய ஏதுவாக்கி இருக்கிறார்கள். இது போதாது என்று ஜவ்வாது, குங்குமப்பூ போன்ற மூலிகைகளும் லாகிரிகளும் சரியான விகிதாசாரங்களில் அப்சிந்த்தின் சுருதியை ஏற்றி களியாட்டம் போட வைக்கிறது.
சிறிலின் பதிவுகளும் இந்த அப்சிந்த்தை ஒத்து இருக்கிறது.
'நனவோடை, நினைவலைகள் எல்லாம் வயசானப் பெருசுதான் எழுதணும்; சொந்த ஊர் புராணம் எல்லாம் புகழ்பெற்றவர் எழுதினால்தான் எடுபடும்' போன்ற பொடாக்களை உடைத்தெறிந்திருக்கிறார்.
புனைவுகளில் சுருக்கமாக கதையின் ஓட்டத்தோடு களமும் கிராமந்தரங்களும் வந்து போகும். இங்கே நடுநாயகமாக தீர்க்கமாக முழு வீச்சுடன் முட்டம் ஹீரோவாகிறது. மனிதப் பிரளயமாய் கதாபாத்திரங்களை கற்பனையாக்காமல், சனங்களை அன்னியோன்யமாய் தெரியவைக்கிறார். வீரியம் அதிகமானாலும் வீச்சு குறையாமல் நெருங்கி அரவணைக்கிறது.
அப்சிந்த் போன்ற சரக்குகளுக்கு மக்களிடம் அறிமுகம் அதிகம் இல்லை. அதற்கென்று தனித்துவ வாசம் உண்டு. திருட்டுத்தனமாக கடத்திய காலம் முதல் அரிதாக தென்படும் இன்றைய நிலை வரை கள்ளின் ருசியறிந்து ஆகர்ஷிப்பவர்களை குஷிப்படுத்தி நிறைவாக்கும் பண்டம்.
களிப்பதற்கென்று எழுதாமல் கருத்தில் வந்ததை எழுதும் இடம் வலைப்பதிவுகள். அதை சரியாக பிரயோகித்திருக்கிறார் சிறில். வெகுசன ஊடகங்களில், நிழலில் விழாத இடத்தில் பதிந்ததை, பொதுமக்களிடம் கொண்டு செல்லும் சாதனமாக இந்த புத்தகம் அமைகிறது.
புகழ்பெற்ற ஓவியர்களான பிகாஸொ, வான்கோ தொடங்கி எழுத்தாளர்கள் ஹெமிங்வே தொட்டு தற்கால ஆஸ்கார் நடிகர்கள் ஜானி டெப் உட்பட அனைவருக்கும் அப்சிந்த் ஆதர்சம்.
வலைக்குறிப்புகளுக்கும் அப்சிந்த் போன்ற கொண்டாட்ட நிலை. எண்ணிக்கை குறித்து அஞ்சாமல் எண்ணங்களை பதிந்து வைக்கும் தடம்.
English360.com மேற்கொண்ட ஆய்வை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். பீங்கான் சாமன்களை செய்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கும் வகுப்பை இரண்டாகப் பிரித்தார் ஆசிரியர். முதல் பாதியிடம் 'உங்கள் பீங்கன் பாத்திரத்தின் தரமும் தன்மையும்தான் முக்கியம்' என்கிறார். மீதி பாதியிடம் 'தரத்தைக் குறித்து அஞ்ச வேண்டாம்; நீங்கள் தயாரிக்கும் எண்ணிகையை அளந்தே மதிப்பிடுவேன்' என்கிறார்.
இரண்டு குழுவில் எந்தக் குழு உயர்தரமான பீங்கான் பொருள்களைத் தயாரித்திருக்கும்? இரண்டாவது குழுதான் வெற்றி பெற்றது.
புத்தகம் எழுதும்போது பக்க அளவு வைத்திருப்போம். பத்திரிகைகளுக்கு என்றால் நாற்பது வரிகள் அல்லது நானூறு வார்த்தை என்று ஏதோ லிமிட் கத்திரி இருக்கும். இங்கே க்வான்டிடி பற்றி கவலைப்படாமல் எழுதுவதால் சிறில் சரக்கு க்வாலிடியாக இருக்கிறது.
சிறிலுக்கு பக்க எண்ணிக்கை லட்சியங்கள் கிடையாது. அனுபவித்த ஒவ்வொன்றையும் உருவாக்கும் எண்ணம் மட்டுமே கொண்டு வலைப்பதிவுகளில் அன்றாடம் யதார்த்த மொழியில் தன்னுடைய வாழ்க்கையை இளமைப் பிராயத்தை தங்கு தடையின்றி எழுதியிருக்கிறார். அது தரத்திலும் மிளிர்கிறது.
துறைமுகங்களுக்கு அருகில் தோணித்துறைகள் இருக்கும். பெருங்கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி துறைமுகங்களை ஆக்கிரமித்திருக்கும். தோணித்துறைகளில் அந்த கப்பல்களில் வந்த பெட்டிகள் ரகவாரியாக பிரிக்கப்படும். தண்ணீரோடு துண்டிக்கப்பட்ட உறவை கோர்க்கும் பாலமாக செயல்படும். சாலைவழியோடு இணைக்கும். சரக்கு ரயில்களில் ஏற்றிச் செல்ல வழிவகுக்கும். ஆசுவாசப்படுத்தி இயல்பாக்கும்.
செயற்கை துறைமுகத்தில் கப்பல்களாக அணுக முடியாத இலக்கியமாக இல்லாமல் எளிமையான உறவை கொடுக்கும் தோணித்துறையாக இந்த முட்டம் அமைந்திருக்கிறது.
கடைசியாக அப்சிந்த்தைக் குடிப்பதற்கு என்று மெக்சிகோ டெக்கீலாவைப் போலவே சாஸ்திரோப்தங்கள் உண்டு. இரண்டு இன்ச் குழியுள்ள தேக்கரண்டியில் சக்கரைக் கட்டிகளை இட வேண்டும். இப்பொழுது இங் ஃபில்லரால் மூன்று சொட்டு அப்சிந்த்தை அதன் மேல் தெளிக்கவும். உடனடியாக வத்திப்பெட்டி உதவியுடன் திரவத்தை பற்ற வைக்கவும். கொஞ்சூண்டு சர்க்கரை மீதம் இருக்கும். அதன் மேல் குளிர்ந்த அக்வாஃபினாவோ தாஸனியோ சுத்த தண்ணீரை ஊற்றவும். இப்பொழுது கோப்பை மேக மூட்டம் கொண்டிருக்கும்.
அப்சிந்த் என்பது சிறிலின் பதிவுகள். அதற்கு அஸ்கா கட்டிகளாக அந்தப் பதிவுக்கு வரும் மறுமொழி பதில்கள். இந்த வாசகர் கேள்விகளும் பின்னூட்டங்களும் சில துளிகளை தெளிக்க, எல்லாமும் கலந்துருகும் கலயமாக இந்த புத்தகக் கோப்பை.
மகிழ்ச்சியுடன் சிந்தை முட்ட முட்ட அமிர்தம் குடிக்க வாழ்த்துகள்.
1. பிறர் எழுதிய அணிந்துரைகளை வாசிக்க: முட்டம் புத்தகம் பதிவர்கள் பார்வையில்
2. புத்தகம் குறித்த அறிமுகம்: முதன் முதலாக வலைப்பதிவு புத்தகமாகிறது
3. விருபா: 2008 புத்தகத்திருவிழா - ஆழி
» © All content and copyrights belong to their respective authors.«
» © FeedShow - Online RSS Feeds Reader

















